Saturday, November 5, 2011

கவிதை வேளைகள்


ழைய காகிதங்களை புரட்டிக் கொண்டிருக்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் தென்பட்டது. கவிதை என்ற தலைப்பிலான அந்த கவிதை:

அது ஒன்றும் எச்சில் அல்ல
நீ சொன்னவுடன்
துப்பி விடுவதற்கு.


வேளை: புகழ்பெற்ற கவிஞர் ஒருவரை பார்ப்பதற்கு நண்பருடன் சென்றிருந்தேன். இவரும் கவிதை எழுதுவார் என்று என்னை அறிமுகப்படுத்தினார் நண்பர். உடனே அவர் "எஙக ஒரு ரெண்டு வரி சொல்லுங்க..." என்றார். அவர் கேட்ட விதம் வீடு திரும்பும் வரை மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எழுதிய கவிதைதான் இது. பொங்கும் உணர்வுகள் கவிதையாய் புனல் கொள்கின்றன என்று சொல்லலாமா?