Sunday, October 2, 2011

யூதாஸ்களை காட்டிக் கொடுப்பவர்கள்

 

யூதாஸ்களை கயவர் என்றே
எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்;

ஆனால் சிலர் யூதாஸ்களை
வேறுபடுத்தியும் அறிகிறார்கள்;

மொஹஞ்சதாரோவைச் சேர்ந்த யூதாஸ் எனில்
கழுவில் ஏற்றத் துடிக்கிறார்கள்;

லோத்தல் யூதாஸ் என்றால்
அரசனாக்குவது தகும் என விவாதிக்கிறார்கள்;

கங்கைச் சமவெளித் தவளைகள்
சிந்துச் சமவெளி வாரிசுகளானால்
வேறு என்ன நடக்கும்?

அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் கொன்று குவிப்பதில்
வேறுபாடு காண கற்றுக் கொடுக்கும்.

 

கடைசி விருந்து அருந்தியவர்களால் மட்டுமே
யூதாஸ்களை காட்டிக் கொடுக்க முடிகிறது;

கசந்து போவதன் மூலமே
கடைசி விருந்து என்பது அறியப்படுவதாலும்;

முன்னம் பலமுறை கசக்காத
விருந்து அருந்தியவர்கள் என்பதாலும்;

வலப்புறமும், இடப்புறமும் திருடர்கள் சூழ
கதறுகிறார்கள், காட்டிக் கொடுத்தவர்கள்.

போருக்குத் தயாராகிறார்கள்,
அப்பாவிகளின் குருதிகளால்
அரசபாட்டை அமைக்கும் யூதாஸ்கள்

தேர்க்கால்களின் மீதேறி ஒருவன்;
சொர்க்கத்திற்கு போவதாகச் சொல்லும்
பொய்க்கால் குதிரை மீதேறி மற்றொருவன்.

 

No comments:

Post a Comment